
தாய்லாந்து ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் சாய் பிரணீத் காலிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்
தாய்லாந்து ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் சாய் பிரணீத் மற்றும் மலேசியாவின் இஸ்கந்தர் ஜல்கர்னைன் மோதினர்.
இதில், 21-13, 21-18 என்ற நேர் செட்களில் இஸ்கந்தர் ஜல்கர்னைனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் சாய் பிரனீத்.
போட்டித் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் சாய் பிரணீத் தனது காலிறுதியில் தாய்லாந்தின் கன்டப்பான் வாங்சரேனுடன் மோதுகிறார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.