
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி 34-வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். அவருக்கு சச்சின் டெண்டுல்கர் டுவிட்டரில் வாழ்த்து கூறியுள்ளார்.
கேப்டவுன் ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் அதி அற்புத 160 நாட் அவுட்டால் இந்தியா, தென்னாப்பிரிக்காவை சரணடைய செய்தது.
இது தொடர்பாக சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில், மைதானத்தில் இறங்கி சதங்களை விளாசுவது கோலிக்கு வாடிக்கையாகிவிட்டது. ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 34-வது சதம் அடித்ததற்கு பாராட்டுகள். இன்னும் அதிக ரன்களை குவிக்கவும் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.