
ஏ கிரேட் கிரிக்கெட் வீரர்களின் ஊதியமான ரூ.2 கோடி போதுமானதாக இல்லை என்று கிரிக்கெட் வீரர் கோலி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஒப்பந்த வீரர்களுக்காக ஊதிய தொகை ‘ஏ’, ‘பி’, ‘சி’ என்று கிரேடு வாரியாக முறையே ரூ.2 கோடி, ரூ.1 கோடி, ரூ.50 இலட்சம் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தால் உயர்த்தப்பட்டது.
டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர் போட்டிகளுக்கான கட்டணமும் முறையே ரூ.15 இலட்சம், ரூ.7 இலட்சம், ரூ.3 இலட்சம் என்றும் அதிகரித்துள்ளது.
ஆனால், இந்த ஊதியம் போதுமான அளவில் இல்லை என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அதிருப்தியில் இருப்பதாகவும் கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும் என விருப்ப படுவதாகவும் கிரிக்கெட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு இந்திய வீரர்களை விட அதிக ஊதியம் வழங்கப்படுவதாக தெரிய வந்ததுதான் விராட் கோலியின் அதிருப்திக்கு காரணம்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.