கோலி ஓய்வு.. கேப்டனாகிறார் ரோஹித் சர்மா..!

 
Published : Nov 27, 2017, 05:44 PM ISTUpdated : Sep 19, 2018, 01:30 AM IST
கோலி ஓய்வு.. கேப்டனாகிறார் ரோஹித் சர்மா..!

சுருக்கம்

rohith sharma is a one day match captain in srilanka series

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தொடர்ந்து ஓய்வே இல்லாமல் கேப்டன் கோலி விளையாடி வருகிறார். ஓய்வில்லாமல் விளையாடுவதால், உடலை பராமரிக்க முடியாததால், உடலையும் மனதையும் சீராக்க ஓய்வு வேண்டும் எனக்கோரி பிசிசிஐ-யிடம் கடிதம் கொடுத்திருந்தார்.

ஆனால், அவருக்கு ஓய்வளிக்கப்படாமல் இருந்தது. அதனால் அவர் பிசிசிஐ-யிடம் முறையிட்டார். இதைத்தொடர்ந்து கோலியின் கோரிக்கையை ஏற்ற பிசிசிஐ, இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரிலிருந்து கோலிக்கு ஓய்வு அளித்துள்ளது.

இதையடுத்து இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஒருநாள் போட்டி அணி வருமாறு:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவண், அஜிங்கிய ரஹானே, ஷ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், தோனி, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சாஹல், ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல்.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஓவராக குடித்து மட்டையான இங்கிலாந்து வீரர்கள்! ஆஷஸ் தோல்விக்கு காரணம் இப்பதான் புரியுது!
20 வயதில் டி20 உலகக்கோப்பை வெற்றி; அதுவே தொடர் வெற்றிக்கு நம்பிக்கை தந்தது: ரோஹித் சர்மா