
பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்படும் இளம் வீரர்கள் என்று முதல் தர கிரிக்கெட்டுக்கு முன்னேறலாம் என்று இந்திய யு-19 அணி பயிற்சியாளர் ராகுல் திராவிட் கூறினார்.
யு-19 உலகக் கோப்பை போட்டிக்காக இந்திய அணி இன்று நியூஸிலாந்து புறப்படுகிறது. நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் திராவிட் இதுகுரித்து கூறியது:
"இந்த உலகக் கோப்பை போட்டியானது இளம் வீரர்களுக்கு உற்சாகமான சவால் அளிப்பதுடன், அவர்களுக்கான நல்லதொரு வாய்ப்பாகும்.
அவர்கள் சிறப்பாகச் செயல்படும் பட்சத்தில் யு-19 அணியிலிருந்து முதல் தர கிரிக்கெட், பின்னர் அங்கிருந்து இந்திய 'ஏ' அணி, அதையடுத்து தேசிய அணி என முன்னேறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
அவர்கள் அடுத்த 6-8 மாதங்களில் இந்திய 'ஏ' அணிக்கு முன்னேறினால் அது சிறப்பான ஒன்று. இப்போட்டியை அதற்கான படிக்கட்டுகளாகப் பார்க்கிறோம் என்று ராகுல் திராவிட் கூறினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.