விம்பிள்டன், ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து விலகிய ரஃபேல் நடால்..! ரசிகர்கள் அதிர்ச்சி

Published : Jun 17, 2021, 10:01 PM ISTUpdated : Jun 17, 2021, 10:02 PM IST
விம்பிள்டன், ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து விலகிய ரஃபேல் நடால்..! ரசிகர்கள் அதிர்ச்சி

சுருக்கம்

விம்பிள்டன் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து ஸ்பெய்னை சேர்ந்த டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் விலகியுள்ளார்.  

உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்களில் ஒருவர் ஸ்பெய்னை சேர்ந்த ரஃபேல் நடால். 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற மிகச்சிறந்த டென்னிஸ் வீரரான நடால், உலக டென்னிஸ் தரவரிசையில் 3வது இடத்தில் உள்ளார்.

அண்மையில் நிறைவடைந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் ஜோகோவிச்சிடம் தோல்வியடைந்தார் நடால். 

இந்நிலையில், உடல்நிலையை கருத்தில்கொண்டு விம்பிள்டன் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை என முடிவெடுத்துள்ள நடால், விம்பிள்டன், ஒலிம்பிக்கிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

பொதுவாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடருக்கும் விம்பிள்டனுக்கும் இடையே குறைந்தது 3 வாரங்கள் இடைவெளி இருக்கும். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரெஞ்சு ஓபன் போட்டிகள் தாமதமாக தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தான் வீரரை வாங்கிய காவ்யா மாறன்.. விதிகளை மீறினாரா? மவுனம் கலைத்த பிசிசிஐ!
காதலியை கரம் பிடிக்கும் குல்தீப் யாதவ்.. வியக்க வைக்கும் மிஸ்டரி ஸ்பின்னரின் சொத்து மதிப்பு!