
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் போஸ்னியா வீரரை வீழ்த்தி ஸ்பெயினின் ரஃபேல் நடால் 3-வது சுற்றுக்கு அசத்தலாக முன்னேறினார்.
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டி இத்தாலியில் நடைப்பெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ரஃபேல் நடால் மற்றும் போஸ்னியா வீரர் டாமிஸ் ஜும்ஹூர் மோதினர். இதில், 6-1, 6-0 என்ற செட்களில் டாமிஸ் ஜும்ஹூரை எளிதாக வீழ்த்தினார் நடால்.
அதேபோன்று மற்றொரு ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-4, 6-2 என்ற செட்களில் ஜியார்ஜியாவின் நிகோலஸ் பாசிலாஷ்விலியை தோற்கடித்தார்.
பிற ஆட்டங்களில் இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினி 6-4, 1-6, 6-3 என்ற செட்களில், போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் இருந்த ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை தோற்கடித்தார்.
அதேபோன்று ஸ்பெயினின் ஆல்பர்ட் ரமோஸ் 6-7(5/7), 7-6(7/2), 7-6(7/5) என்ற செட்களில் அமெரிக்காவின் ஜான் ஐஸ்னரையும் தோற்கடித்தார்.
ஜெர்மனியின் ஃபிலிப் கோல்ஷ்ரைபர் 6-4, 6-3 என்ற செட்களில் அமெரிக்காவின் ஜேக் சாக்கை வீழ்த்தி அசத்தினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.