FIDE கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டி: டைட்டில் வென்று பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி சாதனை!

Published : Nov 06, 2023, 02:00 PM ISTUpdated : Nov 06, 2023, 02:03 PM IST
FIDE கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டி: டைட்டில் வென்று பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி சாதனை!

சுருக்கம்

இங்கிலாந்தில் ஐல் ஆஃப் மேனில் நடந்த ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியில் தமிழக வீராங்கானையும் பிரக்ஞானந்தாவின் சகோதரியுமான வைஷாலி டைட்டில் வென்று சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்தில் ஐல் ஆஃப் மேனில் FIDE கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டி நடந்தது. இதில், பெண்களுக்கான பிரிவில் நடந்த இறுதிப் போட்டியில் தமிழக வீராங்கை வைஷாலி ரமேஷ் பாபு மற்றும் மங்கோலிய வீராங்கனை பத்குயாக் முங்குதுலை மோதினர். இந்தப் போட்டியானது 8.5/11 என்ற புள்ளியுடன் டிராவில் முடிந்தது. மேலும், 25,000 டாலரையும் (ரூ.20 லட்சம்) பரிசாக வென்றார். சமீபத்தில் அஜர்பைஜானில் நடந்த பகு செஸ் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா 2ஆவது இடம் பிடித்தார்.

சரியான இடத்தில் சரியான பீல்டர், பவுலர்களை பயன்படுத்திய விதம் – சிறந்த கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு விருது!

இந்த நிலையில் தற்போது பிரிட்டனில் நடந்த செஸ் போட்டியில் அவரது சகோதரி டைட்டில் வென்றுள்ளார். இதன் மூலமாக வரும் 2024 ஆம் ஆண்டு கனடாவில் நடக்க இருக்கும் செஸ் கேன்டிட் தொடரில் விளையாட தேர்வாகியுள்ளார். இதற்கு முன்னதாக அவரது சகோதரன் பிரக்ஞானந்தா தேர்வாகியிருந்தார். இதே போன்று ஆண்களுக்கான பிரிவில் செஸ் கிராண்ட்மாஸ்ட்ர் அலெக்ஸாண்டர் பிரெட்கேவை தோற்கடித்து இந்தியாவின் விதித் குஜராத்தி சாம்பியன் பட்டம் வென்றார். மேலும், இவர் வரும் 2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் செஸ் கேன்டிட் தொடரில் விளையாட தேர்வாகியுள்ளார்.

Sri Lanka: இந்தியாவுக்கு எதிராக 302 வித்தியாசத்தில் தோல்வி – இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடியாக கலைப்பு!

 

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?