இரசிகர்களை ஏமாற்றினார் பி.வி.சிந்து…

Asianet News Tamil  
Published : Oct 23, 2016, 03:23 AM ISTUpdated : Sep 19, 2018, 03:14 AM IST
இரசிகர்களை ஏமாற்றினார் பி.வி.சிந்து…

சுருக்கம்

டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் 2-ஆவது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து அதிர்ச்சித் தோல்வி அடைந்து, இரசிகர்களை ஏமாற்றினார்.

டென்மார்க்கின் ஓடென்ஸ் நகரில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற 2-ஆவது சுற்றில் சிந்து 13-21, 23-21, 18-21 என்ற செட் கணக்கில் உலகின் 12-ஆம் நிலை வீராங்கனையான ஜப்பானின் சயாக்கா சாட்டோவிடம் தோல்வி கண்டார். இந்த ஆட்டம் ஒரு மணி, 5 நிமிடங்கள் நடைபெற்றது.

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிறகு பங்கேற்ற முதல் போட்டியிலேயே 2-ஆவது சுற்றோடு வெளியேறியது சிந்துவுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

வெள்ளி வென்றபின் மொத்த இந்தியாவின் பார்வையும் சிந்துவின் பக்கம் திரும்பிய நிலையில், இந்த தோல்வி அவர் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் இருந்த இரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளித்துள்ளது.

ஆடவர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் இந்தியாவின் அஜய் ஜெயராம் 21-23, 15-21 என்ற நேர் செட்களில் சீனாவின் ஷி யூகியிடமும், மற்றொரு இந்திய வீரரான எச்.எஸ்.பிரணாய் 10-21, 20-22 என்ற நேர் செட்களில் மலேசியாவின் லீ சாங் வெய்யிடமும் தோல்வி கண்டனர்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs NZ 1st ODI: மரண காட்டு காட்டிய விராட் கோலி..! இமாலய இலக்கை ஊதித்தள்ளிய இந்தியா..
நியூசிலாந்து அணியில் வேலூர் இளைஞர்.. ரஜினியின் வெறித்தனமான ரசிகர்.. யார் இந்த ஆதித்யா அசோக்!