
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் புஜாரா, தொடர்ச்சியாக 8 நாட்கள் விளையாடி புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
இந்தியா-இலங்கை அணிகள் இடையே கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. அந்த போட்டியில் 5 நாட்களும் பேட்டிங் செய்த புஜாரா, டெஸ்ட் போட்டியில் 5 நாட்களும் பேட்டிங் செய்த மூன்றாவது இந்திய வீரர் பெருமையை பெற்றார்.
தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடந்துவருகிறது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் களமிறங்கிய புஜாரா, 7 பந்துகளை சந்தித்து 2 ரன்கள் எடுத்தார். தொடர்ச்சியாக இரண்டாவது நாளான நேற்று விளையாடி சதமடித்தார். நேற்று முழுவதும் ஆட்டமிழக்காமல் இருந்த புஜாரா, மூன்றாவது நாளான இன்றைய ஆட்டத்தையும் தொடர்ந்தார். 143 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அவுட்டானார்.
முதல் போட்டியில் 5 நாட்கள், இரண்டாவது போட்டியில் 3 நாட்கள் என தொடர்ச்சியாக 8 நாட்கள் விளையாடிய வீரர் என்ற புதிய சாதனையை புஜாரா படைத்துள்ளார்.
சிறப்பாக ஆடி சதமடித்த கோலியும் ரோஹித் சர்மாவும் விளையாடி வருகின்றனர். முதல் இன்னிங்சில் தற்போதுவரை 447 ரன்கள் எடுத்துள்ள இந்திய அணி, இலங்கையைவிட 242 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.