பி.எஸ்.ஜி. கோப்பை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ராணுவ அணிகளுக்கு வெற்றி…

First Published Aug 31, 2017, 9:50 AM IST
Highlights
PSG Cup Indian Overseas Bank and Army wins victory


பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய அளவிலான ஆடவர் கூடைப்பந்து போட்டியின் அரையிறுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ராணுவ அணிகள் வெற்றி பெற்றன.

கோவையில் பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 53-வது பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய அளவிலான ஆடவர் கூடைப்பந்து போட்டி ஆகஸ்ட் 27-ஆம் தேதி தொடங்கியது.

பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் 4-வது நாளான நேற்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

முதல் ஆட்டத்தில் சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியை எதிர்த்து பெங்களூரு விஜயா வங்கி அணி விளையாடியது.

இதில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 74-62 என்ற புள்ளிகள் கணக்கில் விஜயா வங்கி அணியை வீழ்த்தியது. 

மற்றொரு ஆட்டத்தில், பஞ்சாப் காவல் துறை அணியை எதிர்த்து புணே ராணுவ அணி விளையாடியது.

இதில், ராணுவ அணி 73-65 என்ற புள்ளிகள் கணக்கில் பஞ்சாப் காவல் துறை அணியை வீழ்த்தியது.

நாளை மாலையில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஐ.ஓ.பி. - புணே ராணுவ அணிகள் விளையாடுகின்றன.

tags
click me!