Pro Kabaddi League: பரபரப்பான போட்டியில் யு.பி யோதாஸை வீழ்த்தி பெங்களூரு புல்ஸ் பிளே ஆஃபிற்கு தகுதி

By karthikeyan VFirst Published Dec 4, 2022, 10:22 PM IST
Highlights

புரோ கபடி லீக் தொடரில் யு.பி யோதாஸை 38-35 என்ற கணக்கில் வீழ்த்திய பெங்களூரு புல்ஸ் பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ளது.
 

புரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகள் முதல் 2 அணிகளாக பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்டன.

பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்புள்ள 2 அணிகளான பெங்களூரு புல்ஸ் மற்றும் யு.பி யோதாஸ் அணிகள் இன்று மோதின. இந்த போட்டியில் ஜெயித்தால் பிளே ஆஃபிற்கு முன்னேறலாம் என்பதால் நீயா நானா போட்டியில் இரு அணிகளும் வெற்றி வேட்கையுடன் களமிறங்கின.

இந்தியாவிற்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசம் மாபெரும் சாதனை

தொடக்கம் முதலே இரு அணிகளும் சிறப்பாக ஆடி புள்ளிகளை பெற்றுவந்தன. பரபரப்பான இந்த போட்டியில் 38-35 என்ற கணக்கில் வெற்றி பெற்ற பெங்களூரு புல்ஸ் அணி 3வது அணியாக பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ளது.

இந்தியாவுக்கு வரமாட்டோம்னு அடம்பிடித்த பாக்.,கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா! வெளுத்துவாங்கிய முன்னாள்வீரர்

புள்ளி பட்டியலில் 4ம் இடத்தில் யு.பி யோதாஸ் அணியும், 5ம் இடத்தில் தமிழ் தலைவாஸ் அணியும் உள்ளன.
 

click me!