
புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 87-வது ஆட்டத்தில் அரியாணா ஸ்டீலர்ஸ் அணி 30-26 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை தோற்கடித்தது.
புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 87-வது ஆட்டம் அரியாணா ஸ்டீலர்ஸ் – ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் இடையே ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்றது.
நேற்று நடைப்பெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 12-12 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. ஆனால் பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் இருந்து அபாரமாக ஆடிய அரியாணா அணி, இறுதியில் 30-26 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிப் பெற்றது.
இந்த வெற்றியின்மூலம் இந்த சீசனில் 8-வது வெற்றியைப் பெற்றுள்ள அரியாணா அணி 'ஏ' பிரிவில் 2-வது இடத்தில் இருக்கிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.