ஜப்பான் ஓபன்: இந்தியாவின் ஸ்ரீகாந்த், எச்.எஸ்.பிரணாய் காலிறுதிக்கு முன்னேறி அசத்தல்…

Asianet News Tamil  
Published : Sep 22, 2017, 11:13 AM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
ஜப்பான் ஓபன்: இந்தியாவின் ஸ்ரீகாந்த், எச்.எஸ்.பிரணாய் காலிறுதிக்கு முன்னேறி அசத்தல்…

சுருக்கம்

Srikanth and HS Brinay advanced to quarter final in Japan Open

ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் உலகின் 8-ஆம் நிலை வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஹாங்காங்கின் ஹூ யூனுடன் மோதினார்.

இதில், 21-12, 21-11 என்ற நேர் செட்களில் ஹூ யூனை வீழ்த்தினார் ஸ்ரீகாந்த். 

ஸ்ரீகாந்த் தனது காலிறுதியில் டென்மார்க்கின் விக்டர் ஆக்ùஸல்சனை சந்திக்கிறார்.

மற்றொரு 2-வது சுற்றில் இந்தியாவின் சாய் பிரணீத், சீன தைபேவின் சூ ஜென் ஹாவுடன் மோதினார்.

இதில், 21-16, 23-21 என்ற நேர் செட்களில் சூ ஜென் ஹாவை தோற்கடித்தார் சாய் பிரணீத்.

சாய் பிரணீத் தனது காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் சீனாவின் ஷி யூகியை சந்திக்கிறார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

MS Dhoni: தோனி எப்போது வருவார்? சிஎஸ்கே கொடுத்த 'சூப்பர்' அப்டேட்.. ரசிகர்கள் ஹேப்பி!
CSK Replacement: ஆயுஷ் மத்ரேக்கு பதில் யார்? CSK-வின் நம்பர் 3 இடத்துக்கு 3 மாஸ் வீரர்கள்!