இந்தியா 2036 ஒலிம்பிக்கை நடத்த விரும்புகிறது - இது ஒவ்வொரு இந்தியர்களின் கனவு - பிரதமர் மோடி!

Published : Oct 14, 2023, 09:24 PM ISTUpdated : Oct 14, 2023, 09:33 PM IST
இந்தியா 2036 ஒலிம்பிக்கை நடத்த விரும்புகிறது - இது ஒவ்வொரு இந்தியர்களின் கனவு - பிரதமர் மோடி!

சுருக்கம்

மும்பையில் நடந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா விரும்புகிறது என்று கூறியுள்ளார்.

மும்பையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டம் நடந்தது. இதில், 2028ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட், ஸ்குவாஷ், பிளாக் கால்பந்து, லாக்ரோக்ஸ், பேஸ்பால், ஆகிய 5 போட்டிகளை சேர்ப்பதற்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் அளித்திருந்தது. இந்த நிலையில் தான் இன்று நடந்த கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதாவது: ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும் என்று இந்தியர்கள் பல ஆண்டுகளாக கனவு கண்டு வருகின்றனர்.

India vs Pakistan: பாகிஸ்தானை பந்தாடி, ரன் ரேட்டில் நம்பர் 1 இடம் பிடித்த இந்தியா – நியூசிலாந்து 2ஆவது இடம்!

உங்கள் உதவியுடன் இந்த கனவை நிறைவேற்ற விரும்புகிறோம். 2036ல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா விரும்புகிறது. 2036ல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா தயாராக உள்ளது. 2036ல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த வேண்டும் என்று கோரியதோடு, 2029ம் ஆண்டு யூத் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா விரும்புவதாகவும் பிரதமர் கூறினார். இந்த நாட்டில், விளையாட்டு வரைபடம் மாறும். ஒலிம்பிக், உலகக் கோப்பை போன்ற போட்டிகள் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகின்றன. இதனால், இந்த நாட்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டால் இந்தியப் பொருளாதாரம் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IND vs PAK: 8ஆவது முறையாக வெற்றி - சாதனையை தக்க வைத்துக் கொண்ட இந்தியா – கௌரவத்தை காப்பாற்றிய ரோகித் சர்மா!

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?