பிரித்வியை டீம்ல எடுத்துகிட்டு ஒருத்தர தூக்குறதுனா யாரை தூக்கலாம்..? முரளி விஜயையா? கேஎல் ராகுலையா? பாண்டிங்கின் பளீச் பதில்

By karthikeyan VFirst Published Dec 16, 2018, 1:29 PM IST
Highlights

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இளம் தொடக்க வீரர் பிரித்வி ஷாவை அணியில் சேர்ப்பதென்றால், முரளி விஜய் அல்லது ராகுல் ஆகிய இருவரில் ஒருவரை நீக்க வேண்டும். அப்படியென்றால் இவர்கள் இருவரில் யாரை நீக்கலாம் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். 
 

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இளம் தொடக்க வீரர் பிரித்வி ஷாவை அணியில் சேர்ப்பதென்றால், முரளி விஜய் அல்லது ராகுல் ஆகிய இருவரில் ஒருவரை நீக்க வேண்டும். அப்படியென்றால் இவர்கள் இருவரில் யாரை நீக்கலாம் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் பிரித்வி ஷாவிற்கு காயம் ஏற்பட்டது. அதனால் முதல் இரண்டு போட்டிகளிலிருந்து பிரித்வி ஷா நீக்கப்பட்டார். 

அதனால் முரளி விஜயும் ராகுலும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பிரித்வி காயமடையவில்லை எனில், முரளி விஜய் மற்றும் ராகுல் ஆகிய இருவரில் ஒருவர் மட்டுமே ஆடும் லெவனில் இடம் பெற்றிருப்பர். பிரித்வியுடன் தொடக்க வீரராக களமிறங்கப்போவது யார் என்ற விவாதம் நடந்துவந்த நிலையில், பிரித்வியின் காயத்தால் இருவருமே வாய்ப்பை பெற்றனர்.

ஆனால் அதை பயன்படுத்திக்கொள்ள இருவருமே தவறிவிட்டனர். முதல் போட்டியில் சொதப்பியதுடன் பெர்த்தில் நடந்துவரும் இரண்டாவது போட்டியிலும் படுமோசமாக சொதப்பினர். கேஎல் ராகுல் தொடர்ச்சியாக சொதப்பினாலும், டெஸ்ட் அணியின் எதிர்காலத்தை மனதில்கொண்டு அவருக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் 35 வயதான முரளி விஜய், இங்கிலாந்தில் முதல் இரண்டு போட்டிகளில் சோபிக்காததால், தொடரிலிருந்து பாதியில் நீக்கப்பட்டார். பின்னர் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அணியில் சேர்க்கப்படவில்லை. 

இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து பாதியில் நீக்கப்பட்ட முரளி விஜய், கவுண்டி போட்டியில் சதமடித்தார். அதனாலும் அவரது அனுபவத்திற்காகவும் ஆஸ்திரேலிய தொடரில் இடம்பிடித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி போட்டியில் சதமடித்த முரளி விஜய், முதல் டெஸ்ட் போட்டியில் சொதப்பினார். இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் டக் அவுட்டாகி வெளியேறினார். 

ராகுலும் தொடர்ந்து சொதப்பித்தான் வருகிறார். ஆனால் அவர் முதல் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 44 ரன்களை அதிரடியாக ஆடி குவித்தார். முரளி விஜய் - ராகுல் இருவருமே சொதப்பிவருவதால் இந்திய அணியின் வெற்றி பாதிக்கப்படுகிறது. அதனால் தொடக்க ஜோடியை சீரமைப்பது இந்திய அணிக்கு மிகவும் முக்கியம். 

இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு நீண்ட இடைவெளி இருப்பதால் அதற்குள் பிரித்வி ஷா காயத்திலிருந்து முழுவதுமாக குணமடைந்து மூன்றாவது போட்டியில் ஆடுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே மூன்றாவது போட்டியில் பிரித்வி ஷா ஆடும்பட்சத்தில் யாரை நீக்கலாம் என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், முரளி விஜயை நீக்கிவிட்டு பிரித்வி ஷாவை களமிறக்கலாம் என தெரிவித்துள்ளார்.

click me!