குத்துச்சண்டை போட்டியில் நிஷாந்த் தேவ் அதிர்ச்சி தோல்வி – பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்து வெளியேற்றம்!

Published : Aug 04, 2024, 12:57 PM IST
குத்துச்சண்டை போட்டியில் நிஷாந்த் தேவ் அதிர்ச்சி தோல்வி – பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்து வெளியேற்றம்!

சுருக்கம்

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் இன்று நள்ளிரவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் நிஷாந்த் தேவ் தோல்வி அடைந்து வெளியேறினார்.

பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா தொடங்கி 8 நாட்கள் முடிந்த நிலையில் 9ஆவது நாளுக்கான போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. இதில், இந்தியா ஹாக்கி, துப்பாக்கி சுடுதல், கோல்ஃப், குத்துச்சண்டை, தடகளம், பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்கிறது. ஒலிம்பிக் 2024 தொடரில் இந்தியா இதுவரையில் 3 வெண்கலப் பதக்கங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. ஒலிம்பிக் 2024 பதக்க பட்டியலில் அமெரிக்கா 61 பதக்கங்களும், பிரான்ஸ் 41 பதக்கங்களும், சீனா 37 பதக்கங்களும், இங்கிலாந்து 33 பதக்கங்களும் கைப்பற்றியுள்ளன.

Olympics 2024 India Schedule: பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024 நாள் 9 – இந்தியா என்னென்ன போட்டிகளில் பங்கேற்கிறது?

இந்தியா பதக்கப் பட்டியலில் 53ஆவது இடத்தில் உள்ளது. பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் நீச்சல், டென்னிஸ், வில்வித்தை, குதிரையேற்றம், ரோவிங் என்று அனைத்திலும் இந்தியா தோல்வி அடைந்து வெளியேறியது. இந்த நிலையில் தான், நள்ளிரவில் நடைபெற்ற குத்துச்சண்டை காலிறுதிப் போட்டியில் இந்திய வீரர் நிஷாந்த் தேவ், மெக்சிகோவின் மார்கோ வெர்டேவை எதிர்கொண்டார். இதில், நிஷாந்த் தேவ் 1-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார். குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பதக்கம் இல்லாமல் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.

துப்பாக்கி சுடுதல் ஸ்கீட் பிரிவில் அனந்த்ஜீத் சிங் நருகா தோல்வி – மகேஷ்வரி 8ஆவது இடம், ரைசா 25ஆவது இடம்!

இன்று பிற்பகல் 3.02 மணிக்கு மகளிருக்கான 75 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிப் போட்டியில் லோவ்லினா போர்ஹகைன் சீனாவின் லி குயானை எதிர்கொள்கிறார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?