Hangzhou 2023: புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ரா – 2ஆவது முறையாக ஆசிய விளையாட்டில் தங்கம் கைப்பற்றி சாதனை!

Published : Oct 04, 2023, 06:37 PM ISTUpdated : Oct 04, 2023, 06:40 PM IST
Hangzhou 2023: புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ரா – 2ஆவது முறையாக ஆசிய விளையாட்டில் தங்கம் கைப்பற்றி சாதனை!

சுருக்கம்

ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.88 மீ தூரம் எறிந்து தங்கம் வென்றுள்ளார்.

சீனாவின் ஹாங்சோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. இதில், தற்போது நடந்து முடிந்த ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.88 மீ தூரம் வரையில் ஈட்டி எறிந்து தங்கம் கைப்பற்றினார். இதன் மூலமாக தொடர்ந்து 2ஆவது முறையாக ஆசிய விளையாட்டில் தங்கம் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

Cricket World Cup 2023: கேப்டன்ஸ் மீட்டிங்கில் நன்றாக அசந்து தூங்கிய தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா!

இதற்கு முன்னதாக, 2021 டோக்கியோ ஒலிம்பிக், 2021 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார். மேலும், கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலமாக இந்தியா 18 தங்கம், 31 வெள்ளி மற்றும் 32 வெண்கலப் பதக்கத்துடன் 81 பதக்கங்கள் கைப்பற்றி பதக்கப் பட்டியலில் 4ஆவது இடம் பிடித்துள்ளது.

India vs South Korea: கொரியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய ஹாக்கி அணி; பதக்கம் உறுதி!

இதே போன்று 41 ஆண்டுகளுக்குப் பிறகு 400 மீ தொடர் ஓட்டப் போட்டியில் இந்தியாவின் முகமது அனாஸ் யஹியா, அமோஜ் ஜாகோப், முகமது அஜ்மல் வரியதோடி, ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் தங்கம் வென்றுள்ளனர். இதன் மூலமாக 400 மீ தொடர் ஓட்டப் போட்டியில் இந்தியா 3ஆவது தங்கம் வென்றுள்ளது.

 

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

அலெக்ஸ் கேரியின் அசுர ஆட்டம்.. நிலைகுலைந்த இங்கிலாந்து.. ஆஷஸ் தொடரை வென்று ஆஸி., அசத்தல்!
T20 World Cup: இந்திய அணியின் துணை கேப்டனை தூக்கி எறிந்தது ஏன்..? ரகசியம் உடைத்த தேர்வுக்குழு