
ஐபிஎல் ஏலத்தில் ரூ.3 கோடிக்கு தமிழக வீரர் நடராஜன் தேர்வு செய்யப்பட்டர் . மேலும், அதிக விலைக்கு தேர்வான ஒரே வீரர் என்ற பெருமையை தட்டி சென்றார் தமிழக வீரர் நடராஜன்
தமிழக வேகப்பந்து வீச்சாளர் :
சேலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன். சிறந்த தமிழக வேகப்பந்து வீச்சாளரான நடராஜனை ரூ.3 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது பஞ்சாப் அணி. மற்றொரு தமிழக வீரரான எம். அஸ்வினை தில்லி அணி ரூ. 1 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப் பட்டவர்களில் அதிக விலைக்கு தேர்வு செய்யப்பட்ட ஒரே வீரர் நடராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர முரளி விஜய் (பஞ்சாப்) ரூ. 3 கோடிக்கும் அஸ்வின் (புணே) ரூ. 7.50 கோடிக்கும் ஏற்கெனவே தேர்வாகியுள்ளார்கள்
தேர்வு செய்யவில்லை :
தமிழக வீரர்களான அபினவ் முகுந்த், பத்ரிநாத் ஆகியோரை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை என்பது கூடுதல் தகவல்
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.