
தேசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் சரிதா தேவி, சோனியா லேதர், பவித்ரா, ஷ்ஷி ஷோப்ரா, சர்ஜுபாலா தேவி ஆகியோர் தங்களது எடைப் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.
தேசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி அரியாணா மாநிலம் ரோத்தக்கில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் 60 கிலோ எடைப் பிரிவில் களம் கண்டுள்ள சரிதா தேவி, தனது அரையிறுதியில் அரியாணாவின் மோனிகாவை 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று அசத்தினார்.
இதனையடுத்து இறுதிச்சுற்றில் அவர் இரயில்வே விளையாட்டு வாரிய வீராங்கனையான பவித்ராவை எதிர்கொள்கிறார்.
பவித்ரா தனது அரையிறுதியில் உத்தரகண்ட் வீராங்கனை பிரியங்கா செளதரியை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, 57 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட சோனியா லேதர் 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் அகில இந்திய காவல்துறை அணியின் சந்தியா ராணியை வென்றார்.
இறுதிச்சுற்றில் சோனியா லேதர், ஷஷி சோப்ராவுடன் மோதுகிறார்.
இதனிடையே, 48 கிலோ எடைப் பிரிவில் சர்ஜுபாலா தேவி தனது அரையிறுதியில் இரயில்வே விளையாட்டு வாரிய வீராங்கனை மீனாட்சியை வென்றதன்மூலம் இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.