ஏடிபி டென்னிஸ் போட்டியில் நடால், ஜோகோயிச் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்...

 
Published : Apr 20, 2018, 10:21 AM ISTUpdated : Sep 19, 2018, 02:16 AM IST
ஏடிபி டென்னிஸ் போட்டியில் நடால், ஜோகோயிச் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்...

சுருக்கம்

Nata and jokovich advanced in ATP tennis tournament

மாண்டேகார்லோ ஏடிபி டென்னிஸ் போட்டியில் முதல் வரிசை வீரர்களான நடால், ஜோகோயிச் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் கண்டு அசத்தியுள்ளனர்.

கடும் காயத்தால் பல மாதங்களாக விளையாடாமல் இருந்த ஜோகோயிச் மாண்டேகார்லோ ஏடிபி டென்னிஸ் போட்டியில் தனது 2-வது சுற்று ஆட்டத்தில் போர்நா கொரிக்குடன் மோதினார்.

இதில், 7-6 (7/2), 7-5 என்ற ஆட்டக்கணக்கில் போர்நா கொரிக்கை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார் ஜோகோயிச். 

அடுத்த சுற்றில் ஆஸ்ட்ரியாவின் டொமினிக் தீம், காலிறுதியில் நடாலை ஜோகோயிச் எதிர்கொள்வார்.

அதேபோன்று பத்து முறை மாண்டேகார்லோ ஏடிபி கோப்பை வென்றவரும், மற்றொரு முன்னணி வீரரான நடால், ஸ்லோவேனியாவின் தாமஸ் பெடினுடன் மோதினார்.

இதில், 6-1, 6-3 என்ற செட் கணக்கில் தாமஸ் பெடினை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் நடால்.

அதேபோன்று, ஜப்பானின் நிஷிகோரி 7-5, 6-2 என்ற செட் கணக்கில் ரஷியாவின் டேனியலையும், இரண்டாம் நிலை வீரரான மரின் சிலிச் 6-3, 7-6 (7/4) என்ற செட் கணக்கில் பெர்ணாண்டோவையும் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Ind Vs SA: மீண்டும் ஓபனராக களம் இறக்கப்படும் சஞ்சு சாம்சன்..? தொடரைக் கைப்பற்றும் இந்தியா..?
சேப்பாக்கம் டூ சின்னசாமி.. தென்னிந்தியாவை மறந்ததா பிசிசிஐ?.. ரசிகர்கள் எழுப்பும் முழக்கம்!