அடுத்த மாதம் ரீ- என்ட்ரீ கொடுக்கிறா நடால்…

Asianet News Tamil  
Published : Nov 10, 2016, 03:33 AM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
அடுத்த மாதம் ரீ- என்ட்ரீ கொடுக்கிறா நடால்…

சுருக்கம்

காயம் காரணமாக இந்த சீசனுக்கான டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகியுள்ள ஸ்பெயின் டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால், டிசம்பரில் நடைபெறவுள்ள முபாதலா உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் மூலம் ரீ-என்ட்ரீ கொடுக்கிறார்.

இதுகுறித்து அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில், "அபுதாபியில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள முபாதலா உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதன் மூலம், மீண்டும் போட்டிகளில் கலந்துகொள்ளத் தொடங்குகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சீசனில், காயம் காரணமாக தடுமாறி வந்த நடால், அடுத்த ஆண்டு போட்டிகளுக்கு தயாராவதற்காக, நடப்பு சீசனுக்கான போட்டிகளில் இருந்து கடந்த அக்டோபரில் வெளியேறினார்.

டிசம்பர் 29 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறும் முபாதலா டென்னிஸ் போட்டியில், உலகின் முதல் நிலை வீரர் ஆன்டி முர்ரே, மிலோஸ் ரயோனிச், ஜோ வில்ஃப்ரைடு சோங்கா, டேவிட் காஃபின், தாமஸ் பெர்டிச் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ப்பா.. என்னா அடி.. சர்ஃபராஸ் கானை சிஎஸ்கே பிளேயிங் லெவனில் சேர்க்கணும்.. ஜாம்பவான் சப்போர்ட்!
டி20 உலகக் கோப்பையில் பெரிய அணிகளை பந்தாட ஆப்கானிஸ்தான் ரெடி.. ஸ்டிராங் டீம்.. அட! கேப்டன் இவரா?