தொழில்முறை போட்டியில் பங்கேற்கும் அகில் மற்றும் ஜிதேந்தர்…

Asianet News Tamil  
Published : Nov 10, 2016, 03:30 AM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
தொழில்முறை போட்டியில் பங்கேற்கும் அகில் மற்றும் ஜிதேந்தர்…

சுருக்கம்

ஹரியாணா காவல்துறையில் துணை கண்காணிப்பாளர்களாக இருக்கும் குத்துச்சண்டை வீரர்களான அகில் குமார், ஜிதேந்தர் குமார் ஆகிய இருவரும், தொழில்முறை போட்டிகளில் பங்கேற்பதற்காக மாநில காவல்துறையிடம் அனுமதி கோரியுள்ளனர்.

இருவரும் டிசம்பர் மாதம் தங்களது தொழில்முறை குத்துச்சண்டையின் முதல் போட்டியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அகில் குமார் கூறுகையில், "ஹரியாணா மாநில டிஜிபி கே.பி.சிங்கை சந்தித்து, நாங்கள் அனுமதி கோரும் கடிதத்தை அளித்துள்ளோம். அதை அவர் உயரதிகாரிகள் பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

விளையாட்டு வீரர்கள் பலருக்கு ஆதரவளித்து அவர்களை ஊக்குவித்த வரலாறு ஹரியாணா காவல்துறைக்கு உள்ளது. அதேபோல், எங்கள் விவகாரத்திலும் ஆதரவு கிடைக்கும் என நம்புகிறோம்' என்றார்.

தொழில்முறை குத்துச்சண்டையில் சிறப்பாக செயல்பட்டு வரும் மற்றொரு வீரரான விஜேந்தர் சிங்கும், ஹரியாணா மாநில காவல்துறையில் துணை கண்காணிப்பாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ப்பா.. என்னா அடி.. சர்ஃபராஸ் கானை சிஎஸ்கே பிளேயிங் லெவனில் சேர்க்கணும்.. ஜாம்பவான் சப்போர்ட்!
டி20 உலகக் கோப்பையில் பெரிய அணிகளை பந்தாட ஆப்கானிஸ்தான் ரெடி.. ஸ்டிராங் டீம்.. அட! கேப்டன் இவரா?