முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் முர்ரே…

Asianet News Tamil  
Published : Nov 22, 2016, 12:02 PM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் முர்ரே…

சுருக்கம்

ஏடிபி உலக டூர் பைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரே முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

இலண்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதிச்சுற்றில் முர்ரே 6-3, 6-4 என்ற நேர் செட்களில் நடப்பு சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை தோற்கடித்தார்.

இந்த வெற்றியின் மூலம் தரவரிசையில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டார் முர்ரே. இந்த சீசனில் தொடர்ச்சியாக 24 ஆட்டங்களில் வென்றுள்ள முர்ரே, தொடர்ச்சியாக 5-ஆவது சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

இதன்மூலம் ஏடிபி பைனல்ஸில் தொடர்ச்சியாக கோலோச்சி வந்த நோவக் ஜோகோவிச்சின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஜோகோவிச் 5 முறை இந்தப் போட்டியில் வாகை சூடியுள்ளார்.

வெற்றி குறித்துப் பேசிய முர்ரே, "இது மிகச்சிறப்பான நாள். ஏடிபி பைனல்ஸில் சாம்பியன் பட்டம் வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இதேபோல் இந்த சீசனை முதல் நிலை வீரர் என்ற பெருமையோடு முடித்திருப்பது மிகவும் சிறப்பானதாகும். இதை ஒருபோதும் நான் எதிர்பார்த்ததில்லை' என்றார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

AUS vs BAN 2nd Test: ஸ்டார்க் வேகத்தில் சிதறிய வங்கதேசம்.. ஆஸ்திரேலியா பதிலடி.. இரண்டே நாளில் முடிந்த போட்டி!
Colombo Test: இலங்கையை ஒயிட்வாஷ் செய்யுமா இந்தியா? கில்லின் மாஸ்டர் பிளான்!