
ஆடும் லெவன் அணியில் எனக்கு என்று ஒரு இடத்தை பிடிக்க கடுமையாக முயற்சிக்கிறேன் என்று மனிஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் மூன்று ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி வெற்றிப் பெற்று தொடரில் 3–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. நான்காவது ஒரு நாள் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நாளை நடக்கிறது.
போட்டி நாள் அன்று பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனிடையே, இந்தியா, ஆஸ்திரேலியா அணி வீரர்கள் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
பின்னர் இந்திய வீரர் மனிஷ் பாண்டே செய்தியாளர்களிடம், “மிடில் வரிசையில் ஆடுவதில் நிச்சயம் நெருக்கடி இருக்கத்தான் செய்யும்.
இன்னும் நிறைய ஆட்டங்களில் விளையாடி, இந்திய அணிக்காக வெற்றிகளை குவிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
ஆடும் லெவன் அணியில் எனக்கு என்று ஒரு இடத்தை பிடிக்க கடுமையாக முயற்சிக்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.