
மாட்ரிட் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
மாட்ரிட் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப் , செக்குடியரசின் கிறிஸ்டினா பிளிஸ்கோவாவை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தில் 6-1, 6-4 என்ற செட்களில் கிறிஸ்டினா பிளிஸ்கோவாவை வீழ்த்தினார் ஹேலப்.
இதேபோல உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான டென் மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 6-2, 6-2 என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் கிகி பெர்டன்ஸை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.
போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருக்கும் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-2, 6-3 என்ற செட்களில், போட்டித் தரவரிசையில் 9-வது இடத்தில் இருந்த அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸை வீழ்த்தினார்.
அதேபோன்று, ஸ்பெயினின் கார்பின் முகுருஸா 2-6, 6-4, 6-1 என்ற செட்களில் குரோஷியாவின் டோனா வெகிச்சை வென்றார்.
மற்றொரு வீராங்கனையான பிரான்ஸின் கரோலின் கார்சியா 6-2, 6-4 என்ற செட்களில் ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜஸை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.