
ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலம் வென்றார் இந்திய வீராங்கனை லவ்லினா.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆடவர் மகளிர் குத்துச்சண்டை அரையிறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற 69 கிலோ எடை பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த லவ்லினா போர்கோஹெயின், துருக்கியைச் சேர்ந்த புஸேனாஸ் சுர்மெனெலிடம் வீழ்ந்தார். இதன்மூலம், அவர் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார். மேலும், அவர் வெண்கலப் பதக்கத்தையும் வெல்கிறார்.
விஜேந்தர் சிங் (2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம்) மற்றும் மேரி கோம் (2012 லண்டன் விளையாட்டுப் போட்டியில் வெண்கலம்) ஆகியோருக்குப் பிறகு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்தியர் லவ்லீனா.
இந்தியாவுக்கு 3வது விருதாக வெண்கலப் பதக்கத்தை வென்று தந்திருக்கிறார் லவ்லினா. இதுவரை 3 பதக்கங்களை இந்தியா வென்றிருக்கிறது. மூன்றையும் வென்று தந்தவர்கள் பெண்கள்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.