#ENGvsIND டெஸ்ட் தொடரை எந்த அணி வெல்லும்.? ஹர்பஜன் சிங் ஆருடம்

By karthikeyan VFirst Published Aug 3, 2021, 10:47 PM IST
Highlights

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரின் முடிவு குறித்து ஹர்பஜன் சிங் ஆருடம் தெரிவித்துள்ளார்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நாளை தொடங்கவுள்ளது. கடந்த 2 சுற்றுப்பயணங்களிலும் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்த இந்திய அணி, இம்முறை இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தும் முனைப்பில் உள்ளது.

அதேவேளையில், இந்திய மண்ணில் மரண அடி வாங்கிய இங்கிலாந்து, தங்களது சொந்த மண்ணில் இந்திய அணியை வீழ்த்தும் முனைப்பில் உள்ளது. இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் உள்ளது.

இந்நிலையில், இந்த தொடரை எந்த அணி வெல்லும் என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், இந்திய அணி 2 அல்லது 3 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறும் என்பது என் கணிப்பு. ஒரு போட்டி டிராவில் முடியும். இந்த தொடர் டிராவில் முடிந்தால் கூட, அதுவே இந்திய அணிக்கு பெரிய விஷயம் தான். ஏனெனில் இங்கிலாந்தில் சவாலான கண்டிஷனில் தொடரை டிரா செய்வதே பெரிய விஷயம் தான். பேட்டிங் நன்றாக ஆடுவது மிக முக்கியம். கோலி, ரோஹித், புஜாரா ஆகிய மூவரும் பொறுப்புடன் பேட்டிங் ஆடியாக வேண்டும். இந்திய வீரர்கள் ஸ்கோர் செய்துவிட்டால், இங்கிலாந்தை சுருட்டிவிடலாம் என்றார் ஹர்பஜன் சிங்.
 

click me!