Ballon d'Or Award: 8ஆவது முறையாக சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி ஆர் விருது வென்ற மெஸ்ஸி!

Published : Oct 31, 2023, 01:37 PM IST
Ballon d'Or Award: 8ஆவது முறையாக சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி ஆர் விருது வென்ற மெஸ்ஸி!

சுருக்கம்

உலகின் மிக உயரிய விருதான பலோன் டி ஆர் விருதை 8ஆவது முறையாக வென்று கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி சாதனை படைத்துள்ளார்.

கடந்த 1956 ஆம் ஆண்டு முதல் கால்பந்தில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு பிரெஞ்சு கால்பந்து இதழான பிரான்ஸ் ஃபுட்பால் விருது வழங்கி வருகிறது. அதில் உயரிய விருதாக கருதப்படுவது பலோன் டி ஆர் விருது. ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருதுக்கான பரிந்துரை பட்டியலில் ஆண்கள் பிரிவில் 30 பேர் இடம் பெற்றிருந்தனர். கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2023 ஆம் ஆண்டு ஜூலை வரையில் வீரர்களின் செயல்பாடுகள் குறித்து தேர்வு நடந்துள்ளது.

IND vs ENG: 5ஆவது முறையாக 1000 ரன்களை கடந்த சாதனை மன்னன் ஹிட்மேன் ரோகித் சர்மா!

அதன்படி முன்னணி கால்பந்து வீரர்களான கெவின் டி ப்ரூய்ன், லியோனல் மெஸ்ஸி, ஹாலண்ட், எம்பாப்பே, ரோட்ரி ஆகியோர் முதல் 5 இடங்களைப் பிடித்தனர். இதில் அர்ஜெடினா கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி இந்த ஆண்டிற்கான பலோன் டி ஆர் விருது வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலமாக 8ஆவது முறையாக மெஸ்ஸி இந்த விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.

Womens Asian Champions Trophy:மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி – சீனாவை வீழ்த்தி இந்தியா ஹாட்ரிக் வெற்றி!

முதல் முறையாக கடந்த 2009 ஆம் ஆண்டு மெஸ்ஸிக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அதன் பிறகு பின் 2010, 2011, 2012, 2015, 2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் இந்த விருதை மெஸ்ஸி வென்றுள்ளார். இதன் மூலமாக அதிக முறை இந்த விருதை வென்ற வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்துள்ளார்.

குறைந்த இன்னிங்ஸ்களில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தும் முகமது ஷமி!

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

IND vs SA 2nd T20: சுப்மன் கில், சூர்யகுமார் படுமோசம்..! இந்தியாவை ஊதித்தள்ளிய தென்னாப்பிரிக்கா!
டி20 உலகக்கோப்பை டிக்கெட் வெறும் 100 ரூபாய் தான்! எப்படி புக் செய்வது? முழு விவரம் இதோ!