தோனி, கெயில் போல நான் சக்தி வாய்ந்தவன் இல்லை - கேப்டன் ரோஹித் சர்மா

 
Published : Dec 15, 2017, 10:01 AM ISTUpdated : Sep 19, 2018, 01:41 AM IST
தோனி, கெயில் போல நான் சக்தி வாய்ந்தவன் இல்லை - கேப்டன் ரோஹித் சர்மா

சுருக்கம்

like Dhoni Gail I am not powerful - Captain Rohit Sharma

எம்.எஸ்.தோனி, கிறிஸ் கெயில் ஆகிய வீரர்கள் போன்று நான் அதிக சக்திவாய்ந்தவன் கிடையாது. ஆனால், பந்து வரும் நேரத்தை கணித்து என்னால் விளையாட முடியும் என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.

பஞ்சாப் மாநிலம், மொஹாலியில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ரோஹித் சர்மா மூன்றாவது முறையாக இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார்.

ஆட்டம் முடிந்த பிறகு, அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் ரோஹித் சர்மா தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியது:

"இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் ஷிகன் தவன் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினார். ஆட்டத்தில் சிறப்பான ஜோடி அமைவதும் முக்கியம்.  

ஒரு பந்துவீச்சாளர் ஒருவருக்கு மட்டுமே ஆறு பந்துகளையும் வீச விடாமல் செய்தோம். அதாவது, ஒரு ஓவரில் ஒவ்வொரு பந்தையும் அடித்து ஆடி இடம்மாறிக் கொண்டிருந்தோம்.  தவன், இடது கை பேட்ஸ்மேன் என்பதாலும், நான் வலது கை பேட்ஸ்மேன் என்பதாலும் இவ்வாறு இடம்மாறி பந்துவீச்சாளர்களுக்கு சவாலை ஏற்படுத்தினோம்.

அணி வீரர்களின் உடற்தகுதியை மேம்படுத்தும் பயிற்சியாளர் சங்கர் பாசுஸுக்கு நன்றி. எம்.எஸ்.தோனி, கிறிஸ் கெயில் ஆகிய வீரர்கள் போன்று நான் அதிக சக்திவாய்ந்தவன் கிடையாது. ஆனால், பந்து வரும் நேரத்தை கணித்து என்னால் விளையாட முடியும்" என்று அவர் தெரிவித்தார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

உள்நாட்டு கிரிக்கெட்டின் கிங்..! இந்திய 'ஸ்டார்' ஆல்ரவுண்டர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
WTC புள்ளிப்பட்டியலில் இந்திய அணி பரிதாபம்..! முதலிடம், இரண்டாம் இடம் எந்த அணி?