சமனில் முடிந்தது கொல்கத்தா – கேரளா ஆட்டம்…

Asianet News Tamil  
Published : Nov 30, 2016, 12:09 PM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
சமனில் முடிந்தது கொல்கத்தா – கேரளா ஆட்டம்…

சுருக்கம்

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்தாட்டப் போட்டியில் அட்லெடிகோ டி கொல்கத்தா - கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

இந்த இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பரபரப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தில், முதல் கோல் வாய்ப்பு கேரள அணிக்கு கிடைத்தது.

ஆட்டத்தின் 8-ஆவது நிமிடத்தில் சக வீரர் செட்ரிக் பாஸ் செய்த பந்தை தலையால் முட்டி கோலாக்கினார் கேரள வீரர் வினீத். அதற்கு பதிலடி தரும் வகையில் 18-ஆவது நிமிடத்தில் கொல்கத்தா அணியின் பியர்சன் கோல் அடித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளுமே கோல் அடிக்காத காரணத்தால், ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமன் ஆனது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

சிம்பு விக்கெட்டை எடுத்தது நான்தான்! வைரலாகும் முதல்வர் ஸ்டாலின் ஸ்பின் பவுலிங் வீடியோ!
Boxing Day Test: முதல் நாளில் சாய்ந்த 20 விக்கெட்டுகள்! ஆஸி., இங்கிலாந்து பௌலர்கள் வெறித்தனம்