நேருக்கு நேர் மோதும் தமிழர்கள்.. வாழ்வா சாவா போட்டியில் கொல்கத்தா முதலில் பேட்டிங்!!

Asianet News Tamil  
Published : May 12, 2018, 04:11 PM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
நேருக்கு நேர் மோதும் தமிழர்கள்.. வாழ்வா சாவா போட்டியில் கொல்கத்தா முதலில் பேட்டிங்!!

சுருக்கம்

kkr facing punjab in its important match

பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.

இதுவரை 11 போட்டிகளில் ஆடி 5ல் வெற்றியுடன் 10 புள்ளிகளை பெற்றுள்ள கொல்கத்தா அணி, புள்ளி பட்டியலில் 5ம் இடத்தில் உள்ளது. எஞ்சிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் பஞ்சாப்புடன் கொல்கத்தா அணி ஆடிவருகிறது. தமிழக வீரர்களை கேப்டனாக இரு அணிகள், வெற்றி கட்டாயத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன.

இந்தூர் மைதானத்தில் நடக்கும் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் அஸ்வின், முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். 

கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் லின் மற்றும் நரைன் ஆடிவருகின்றனர். இந்த சீசனில் இரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே நடந்த போட்டியில் பஞ்சாப் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.  
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ப்பா.. என்னா அடி.. சர்ஃபராஸ் கானை சிஎஸ்கே பிளேயிங் லெவனில் சேர்க்கணும்.. ஜாம்பவான் சப்போர்ட்!
டி20 உலகக் கோப்பையில் பெரிய அணிகளை பந்தாட ஆப்கானிஸ்தான் ரெடி.. ஸ்டிராங் டீம்.. அட! கேப்டன் இவரா?