டூபிளெஸ்ஸிஸ் மீது நடுவர் ஆன்டி கிராப்ட் முன்னிலையில் விசாரணை…

Asianet News Tamil  
Published : Nov 19, 2016, 12:38 PM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
டூபிளெஸ்ஸிஸ் மீது நடுவர் ஆன்டி கிராப்ட் முன்னிலையில் விசாரணை…

சுருக்கம்

தென் ஆப்பிரிக்க கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹோபர்ட்டில் நடைபெற்றது.

அதில் முதல் நாளில் பந்தின் தன்மையை மாற்றும் வகையில் சூயிங்காம் மென்ற உமிழ்நீரால் டூபிளெஸ்ஸிஸ் பந்தை சேதப்படுத்தியது தொலைக்காட்சி விடியோ பதிவின் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால் இதை டூபிளெஸ்ஸிஸ் மறுத்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நடுவர் ஆன்டி கிராப்ட் முன்னிலையில் விசாரணை நடைபெறவுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விசாரணை நடைபெறும் தேதி குறிப்பிடப்படவில்லை.

டூபிளெஸ்ஸிஸ் பந்தை சேதப்படுத்தியது உறுதி செய்யப்பட்டால் அவருக்கு போட்டி ஊதியத்தில் 50 முதல் 100 சதவீதம் வரை அபராதம் அல்லது ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படலாம்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

2 நாளில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டி.. ஒரே நாளில் 20 விக்கெட்.. மெல்போர்ன் பிட்ச் கியூரேட்டர் விளக்கம்!
இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் வி.வி.எஸ் லட்சுமணன்?.. பிசிசிஐ சொன்ன முக்கிய அப்டேட்!