
மகளிர் இளையோர் மற்றும் ஜூனியர் பிரிவு குத்துச் சண்டை போட்டியில் 12 தங்கமும், இரண்டு பிரிவுகளிலும் 2 வெள்ளியும், 3 வெண்கலமும் வென்று அசத்தியது இந்தியா.
மகளிர் இளையோர் மற்றும் ஜூனியர் பிரிவு குத்துச் சண்டை போட்டி செர்பியாவில் நேற்றுடன் நிறைவடைந்தது.
ஏழாவது 'நேஷன்ஸ் கப்' குத்துச்சண்டைப் போட்டியில், பல்வேறு எடைப் பிரிவுகளில் இந்திய இளையோர் மற்றும் ஜூனியர் வீராங்கனைகள் பதக்கங்களைக் வென்றனர்.
ஜூனியர் பிரிவில், ஏக்தா சரோஜ் 46 கிலோ எடைப்பிரிவு, பூணம் 54 கிலோ எடைப்பிரிவு, அருந்ததி சௌதரி 60 கிலோ எடைப்பிரிவு வின்கா +80 கிலோ எடைப்பிரிவு உள்பட ஒன்பது வீராங்கனைகள் தங்கம் வென்றனர்.
இதேபிரிவில், சஞ்சீதா, லிபாக்ஷி வெள்ளியும், அர்ஷி கனம், யஷி சர்மா ஆகியோர் வெண்கலம் வென்றனர்.
இளையோர் பிரிவில், ஜோனி 60 கிலோ எடைப்பிரிவு, லலிதா 64 கிலோ எடைப்பிரிவு, நந்தினி 81 கிலோ எடைப்பிரிவு தங்கம் வென்றனர். ராஜ்பாலா 54 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்றார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.