
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டியின் சீசன் - 4 கத்ரினா கைஃப் - சல்மான்கான் ஜோடியின் ஆட்டத்தோடு தொடங்கிய இதன் முதல் ஆட்டம் சமனில் முடிந்தது.
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டியின் சீசன் - 4 கேரள மாநிலம், கொச்சியில் நேற்றுத் தொடங்கியது.
இந்த சீசனின் முதல் ஆட்டமான அட்லெடிகோ டி கொல்கத்தா - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் இடையேயான ஆட்டம் கோல்கள் இன்றி சமனில் முடிந்தது.
முன்னதாக, கொச்சி ஜவாஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சீசனின் தொடக்க விழா நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும், கேரள பிளாஸ்டர்ஸ் அணி உரிமையாளர்களில் ஒருவருமான சச்சின் டெண்டுல்கர், ஐஎம்ஜி ரிலையன்ஸ் உரிமையாளர் நீதா அம்பானி, மலையாள நடிகர் மம்மூட்டி ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னதாக, பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப் - சல்மான்கானின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அதனையடுத்து கொல்கத்தா - கேரளா அணிகள் இடையேயான ஆட்டம் தொடங்கியது.
இரண்டு அணிகளுக்கும் இடையே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளுமே கடுமையாக போராடின. இருந்தபோதும் எந்த அணிக்கும் கோல் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆட்டத்தின் இறுதிவரை இதே நிலை நீடிக்க இந்த சீசனின் முதல் ஆட்டம் கோல்கள் இன்றி சமனில் முடிந்தது.
நடப்பு சாம்பியனான கொல்கத்தாவும், கேரளா அணியும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை என்று முதல் ஆட்டத்திலேயே நிரூபித்துள்ளனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.