
ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் பத்து ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிக்கு முன்னேறிய முதல் அமெரிக்கர் என்று பெருமையை ஜேக் சாக் பெற்றுள்ளார்.
ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டி இலண்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முன்னதாக நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் ஜேக் சாக் மற்றும் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் மோதினர்.
இதில், 6-4, 1-6, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்வெரேவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் ஜேக் சாக்.
இந்த வெற்றியின்மூலம் கடந்த பத்து ஆண்டுகளில் ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் அமெரிக்கர் என்ற பெருமையை ஜேக் சாக் பெற்றுள்ளார்.
முன்னதாக, கடந்த 2007-ஆம் ஆண்டு சீசனில் அமெரிக்காவின் ஆன்டி ரோடிக் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார்.
வெற்றிக்குப் பிறகு பேசிய ஜேக் சாக், "ஸ்வெரேவுக்கு எதிரான ஆட்டம் கடினமான ஒன்றாக ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது.
மூன்றாவது செட்டில் முதலில் சாதாரணமாக ஆடினாலும், பிறகு ஆக்ரோஷமாக ஆடி ஆட்டத்தை கைப்பற்றினேன்" என்று அவர் தெரிவித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.