
சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஆனால், சாய்னா நெவால், ஹெச்.எஸ்.பிரணாய் ஆகியோர் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர்.
சீன ஓபன் பாட்மிண்டன் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் நடப்புச் சாம்பியனான சிந்து தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சீன வீராங்கனையான ஹான் யூவை எதிர்கொண்டார்.
இருவருக்கும் இடையே விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் சிந்து 21-15, 21-13 என்ற செட் கணக்கில் வெற்றிப் பெற்றார்.
சிந்து தனது காலிறுதியில் சீனாவின் தகுதிச் சுற்று வீராங்கனையான காவ் ஃபாங்ஜியை சந்திக்கிறார்.
மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றில் போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் ஜப்பானின் அகானே யமாகுசியை எதிர்கொண்ட சாய்னா, அதில் 18-21, 11-21 என்ற செட் கணக்கில் தோல்வி கண்டார்.
அதேபோன்று, ஆடவர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் உலகின் 11-ஆம் நிலை வீரருமான பிரணாய், உலகின் 53-ஆம் நிலை வீரரான ஹாங்காங்கின் செயுக் யியுவை எதிர்கொண்டு 19-21, 17-21 என்ற செட் கணக்கில் வீழ்ந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.