நான் பந்தை சேதப்படுத்தியதாகக் கூறினால் அது தவறு - டூபிளெஸ்ஸிஸ்

Asianet News Tamil  
Published : Nov 24, 2016, 12:00 PM ISTUpdated : Sep 19, 2018, 02:03 AM IST
நான் பந்தை சேதப்படுத்தியதாகக் கூறினால் அது தவறு - டூபிளெஸ்ஸிஸ்

சுருக்கம்

நான் பந்தை சேதப்படுத்தியதாகக் கூறினால் அது தவறு என்று தென் ஆப்பிரிக்க கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 2-ஆவது டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்தியதாக டூபிளெஸ்ஸிஸ் மீது புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. அதன்முடிவில் டூபிளெஸ்ஸிஸ் போட்டி ஊதியத்தில் 100 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் டூபிளெஸ்ஸிஸ், “நான் தவறிழைத்ததாக தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதை முற்றிலும் மறுக்கிறேன். நான் எந்தத் தவறும் செய்ததாக நினைக்கவில்லை. பந்தின் தன்மையை மாற்றுவதற்கும், பந்தை பளபளப்பாக்குவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நான் பந்தை சேதப்படுத்தியதாகக் கூறினால் அது தவறு.

பந்தை பளபளப்பாக்குவது என்பது அதை சேதப்படுத்துவதற்கு இணையாகாது என்றுதான் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் கூறுகிறார்கள். அனைத்து கிரிக்கெட் வீரர்களும் பந்தை பளபளப்பாக்குவது வழக்கமான ஒன்றுதான்.

எனது விவகாரத்துக்குப் பிறகு இதில் ஏராளமான குழப்பம் இருப்பதாக நினைக்கிறேன். பந்தை பளபளப்பாக்குவது தவறு என நான் நம்பவில்லை. எனவே அது மோசடியாகாது. நான் பந்தை பளபளப்பாக்கியதை தவறாகப் பார்க்கவில்லை” என்று தெரிவித்தார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

WTC 2025-27 இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுமா? 3 முக்கிய விஷயங்கள்
ஆஷஸ் தொடர் 2025-26: ஆஸ்திரேலியாவின் 14 ஆண்டு கால சாதனையை முறியடித்த இங்கிலாந்து