இண்டர்நேஷனல் மாஸ்டர் தொடங்கி வைத்த செஸ் மற்றும் கேரம் போட்டி…

 
Published : Mar 03, 2017, 12:17 PM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
இண்டர்நேஷனல் மாஸ்டர் தொடங்கி வைத்த செஸ் மற்றும் கேரம் போட்டி…

சுருக்கம்

International Master in chess and carom competition that started

இந்திய பெரும் துறைமுகங்களுக்கு இடையேயான செஸ் மற்றும் கேரம் போட்டியை இந்தியாவின் முதல் இண்டர்நேஷனல் மாஸ்டரான மானுவேல் ஆரோன் தொடங்கி வைத்தார்

இந்திய பெரும் துறைமுகங்களுக்கு இடையேயான செஸ் மற்றும் கேரம் போட்டி சென்னையில் நேற்றுத் தொடங்கியது. இது வரும் 4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதற்கான தொடக்க விழா சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நேற்ரு நடைபெற்றது.

இதில் இந்தியாவின் முதல் இண்டர்நேஷனல் மாஸ்டரும், அர்ஜூனா விருது பெற்றவருமான மானுவேல் ஆரோன் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறும் இந்தப் போட்டிகளில் மும்பை, கோவா, மங்களூர், விசாகப்பட்டினம், சென்னை, எண்ணூர் காமராஜர் உள்ளிட்ட 9 துறைமுகங்களைச் சேர்ந்த சுமார் 115 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

போட்டிக்கான ஏற்பாடுகளை காமராஜர் துறைமுகமும், பெருந்துறைமுகங்களுக்கான விளையாட்டு மன்றமும் செய்துள்ளன.

இந்த நிகழ்ச்சியில் காமராஜர் துறைமுகத்தலைவர் எம்.ஏ.பாஸ்கராச்சார், பொதுமேலாளர்கள் கிருஷ்ணசாமி, ராதாகிருஷ்ணன், குணசேகரன்,போக்குவரத்து மேலாளர் கருப்பையா மற்றும் மக்கள் தொடர்பு மேலாளர் அட்சயநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

அலெக்ஸ் கேரியின் அசுர ஆட்டம்.. நிலைகுலைந்த இங்கிலாந்து.. ஆஷஸ் தொடரை வென்று ஆஸி., அசத்தல்!
T20 World Cup: இந்திய அணியின் துணை கேப்டனை தூக்கி எறிந்தது ஏன்..? ரகசியம் உடைத்த தேர்வுக்குழு