
அகாபுல்கோ ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் ரஃபேல் நடால் உள்ளிட்டோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
மெக்ஸிகோவின் அகாபுல்கோ நகரில் நடைபெற்று வரும் அகாபுல்கோ ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜோகோவிச் கடும் போராட்டத்துக்குப் பிறகு 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோவை தோற்கடித்தார்.
ஜோகோவிச் தனது காலிறுதியில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸை சந்திக்கிறார்.
நடால் 6-1, 6-1 என்ற நேர் செட்களில் இத்தாலியின் பாலோ லோரென்ஸியைத் தோற்கடித்தார்.
காலிறுதியில் ஜப்பானின் யோஷிஹிட்டோ நிஷியோகாவை எதிர்கொள்கிறார் நடால்.
குரோஷியாவின் மரின் சிலிச் 6-3, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் சகநாட்டவரான போர்னா கோரிச்சை தோற்கடித்தார்.
இதன்மூலம் காலிறுதிக்கும் முன்னேறியவர்கள் பட்டியலில் மரின் சிலிச் இடம் பெறுகிறார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.