இறுதிச்சுற்றில் ஜப்பான் வீரரிடம் படுதோல்வி அடைந்தார் இந்தியாவின் ராம்குமார்…

Asianet News Tamil  
Published : Jul 17, 2017, 09:21 AM ISTUpdated : Sep 19, 2018, 12:53 AM IST
இறுதிச்சுற்றில் ஜப்பான் வீரரிடம் படுதோல்வி அடைந்தார் இந்தியாவின் ராம்குமார்…

சுருக்கம்

Indias Ramkumar defeated by Japanese player in the final

வினெட்கா ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் ஜப்பான் வீரரிடம் இந்திய வீரர் ராம்குமார் படுதோல்வி அடைந்தார்.

வினெட்கா ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் வினெட்காவில் நேற்று நடைபெற்றது.

இதன் இறுதிச் சுற்றில் இந்தியாவின் ராம்குமார் மற்றும் ஜப்பானின் அகிரா சான்டிலன் அதிரடியாக மோதினார்.

விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட் கணக்கில் 6-7 (1) என்ற விகிதத்தில் ராம்குமார் பின்தங்கி இருந்தார்.

அடுத்த செட்டில் முன்னேறிவிடலாம் என்று முனைப்போடு விளையாட ஆரம்பித்த் ராம்குமாரின் பந்துகள் அனைத்தையும் எளிதில் முறியடித்தார் சான்டிலன்.

இரண்டாவது செட்டிலும் 2-6 என்ற செட்களில் முன்னேறி ராம்குமாருக்கு தோல்வியளித்தார் ஜப்பானின் அகிரா சான்டிலன்.

இறுதிச் சுற்றுவரை சென்று வெற்றிப்பெற முடியாமல் போனதற்கு வருத்தப்பட்டார் ராம்குமார்.

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Asian Games 2026: வெறும் 5 ஓவரில் ஜப்பானை ஊதித்தள்ளிய இந்திய மகளிர் அணி.. செமி பைனலுக்கு என்ட்ரி!
Abhishek Sharma: ஆத்தாடி! என்னா அடி! சிக்சர் மழை.. வெறும் 30 பந்தில் சதம்.. அபிஷேக் சர்மா உலக சாதனை!