வினேஷ் போகத் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு – இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் கிடைக்குமா?

Published : Aug 10, 2024, 07:37 PM IST
வினேஷ் போகத் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு – இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் கிடைக்குமா?

சுருக்கம்

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மகளிருக்கான மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்தின் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மகளிருக்கான மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் எலிமினேஷ் சுற்று போட்டி முதல் காலிறுதிப், அரையிறுதி என்று அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தார். இதன் மூலமாக மகளிருக்கான மல்யுத்த போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வீராங்கனை என்ற சாதனையை வினேஷ் போகத் படைத்திருந்தார். இதன் மூலமாக இந்தியாவிறு தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் கிடைக்கும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்த இளம் இந்திய வீரர் அமன் செராவத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ஆனால், அவர் 50 கிலோவிற்கும் அதிகமாக உடல் எடை இருப்பதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. முதல் நாள் இரவே 100 கிராம் கூடுதல் எடையுடன் இருப்பது தெரிய வர, அவருக்கு தீவிர உற்பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், அவரால் 100 கிராம் உடல் எடையை குறைக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து அடுத்த நாளே தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் ஓய்வு அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். இந்த நிலையில் தான் தகுதி நீக்கத்தை எதிர்த்து வெள்ளிப் பதக்கம் வழங்கக் கோரி விளையாட்டு தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்தார்.

காலிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த மல்யுத்த வீராங்கனை ரீத்திகா ஹூடா – தங்கப் பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா!

அந்த மனு மீதான விசாரணை கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இரவு 9.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதில், வினேஷ் போகத்திற்கு வெள்ளிப் பதக்கம் வழங்கக் கோரி தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

IND vs SA 1st T20: ஹர்சித் ராணா நீக்கம்.. தமிழக வீரருக்கும் இடமில்லை.. இந்திய அணி பிளேயிங் லெவன்!
இந்தியாவுக்காக மீண்டும் களம் இறங்கும் ரோ-கோ எப்போது தெரியுமா? கோலி, ரோஹித்தின் அடுத்த ஒருநாள் போட்டி