காலிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த மல்யுத்த வீராங்கனை ரீத்திகா ஹூடா – தங்கப் பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா!

Published : Aug 10, 2024, 05:37 PM IST
காலிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த மல்யுத்த வீராங்கனை ரீத்திகா ஹூடா – தங்கப் பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா!

சுருக்கம்

மகளிருக்கான 76 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ரீத்திகா ஹூடா தோல்வி அடைந்து வெளியேறினார். இதனால், இந்திய அணியின் பதக்க வாய்ப்பும் பறிபோனது.

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரின் 15ஆவது நாளான இன்று ஆகஸ்ட் 10 ஆம் தேதி இந்தியா கோல்ஃப் மற்றும் மல்யுத்தம் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில், கோல்ஃப் போட்டி நடைபெற்று வரும் நிலையில், மகளிருக்கான 76 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ரீத்திகா ஹூடா எலிமினேஷ சுற்று எனப்படும் 16ஆவது சுற்று போட்டியில் விளையாடினார்.

Athletes Salary: பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் விளையாட்டு வீரர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது தெரியுமா?

இதில், ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த பெர்னாடெட் நாகியை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் ரீத்திகா 12-2 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இந்தப் போட்டியில் கிர்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஐபெரி மெடெட் கைஸியை எதிர்கொண்டார். மிகவும் பரபரப்பாக சென்ற இந்தப் போட்டியில் இருவரும் 1-1 என்று சமன் செய்தனர்.

Olympic Gold Medal Price: பாரிஸ் 2024 ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா?

இந்த நிலையில் தான் ஐபெரி உலகக் சாம்பியன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் நின்ற நிலையில் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இந்த போட்டியில் இந்தியா தங்கம் வென்று பதப்பட்டியலில் முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மகளிருக்கான 76 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிப் போட்டியில் தோல்வி தோல்வி அடைந்தார். எனினும் அவர் 2ஆவது வாய்ப்பு போட்டியில் இடம் பெற்று வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இடம் பெற்று விளையாட இருக்கிறார்.

Paris 2024 Olympics India Schedule : பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024 – இந்தியா விளையாடும் கடைசி போட்டிகள் என்னென்ன?

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?