
உபேர் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் இந்திய மகளிர் அணி 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
உலக குழு சாம்பியன் போட்டி (தாமஸ், உபேர் கோப்பை) பாங்காக்கில் நடந்து வருகிறது.
ஏற்கெனவே இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பிரான்ஸ், கனடாவிடம் தோல்வியுற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நேற்று நடைபெற்ற உபேர் கோப்பை ஆட்டத்தில் சாய்னா நேவால் தலைமையிலான மகளிர் அணி 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வென்றது.
சாய்னா 2-0 என்ற செட்கணக்கில் சுவான்வெண்டி சென்னை வென்றார்.
வைஷ்ணவி ரெட்டி 2-0 என்ற கணக்கில் ஜெனிபர் டாமை வீழ்த்தினார்.
அனுரா பிரபுதேசாய் 2-0 என எசிலி பங்கை வீழ்த்தினார்.
இரட்டையர் பிரிவில் சனியோகிதா - கோர்பட இணை வென்றது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.