
மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் சென்னை, கோவை அணிகள் சாம்பியன் வென்று அசத்தின.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே படர்ந்தபுளியில் லியா கைப்பந்து கழகம் சார்பில் கனரா வங்கி கோப்பைக்கான 15-வது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாநில கைப்பந்து போட்டிகள் நடைப்பெற்றன.
பகல் இரவு ஆட்டங்களாக சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாள்கள் நடைபெற்ற இதன் ஆண்களுக்கான போட்டிகள் நாக் அவுட் முறையில் நடத்தப்பட்டன.
இதில் தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை, சென்னை, ராமநாதபுரம், கோவை, திருப்பூர் உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து 35க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடின.
இறுதி ஆட்டத்தில் கேரள வாலி அணியும், கோவை தடாகம் சி.வி.சி. அணியும் மோதின. இதில் 3:1 என்ற புள்ளி கணக்கில் கோவை அணி வெற்றி பெற்றது.
பெண்களுக்கான போட்டிகள் லீக் முறையில் நடத்தப்பட்டன. இதில் 6 அணிகள் கலந்து கொண்டன. சென்னை தாம்பரம் அணியும், திருச்சி பிஷப் ஹீபர் அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இதில் 2:0 என்ற புள்ளி கணக்கில் சென்னை தாம்பரம் அணி வெற்றி பெற்றது.
பின்னர் நடைப்பெற்ற பரிசளிப்பு விழாவுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி.சீனிவாசன் தலைமை வகித்தார். தூத்துக்குடி மண்டல அலுவலக கனரா வங்கி உதவிப் பொதுமேலாளர் காந்தி, வெற்றி பெற்ற அணிகளுக்கு கனரா வங்கி சுழற்கோப்பையை வழங்கி சிறப்பித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.