
அதிகமான ஐபிஎல் போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றியவர் என்ற பெருமையை இந்திய நடுவர் சுந்தரம் ரவி பெற்றுள்ளார்.
சென்னையை சேர்ந்த நடுவர் சுந்தரம் ரவி. சர்வதேச டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றியவர். 2015 உலக கோப்பையில் பணியாற்றிய 20 நடுவர்களில் சுந்தரம் ரவியும் ஒருவர்.
நல்ல அனுபவம் வாய்ந்த நடுவரான இவர், ஐபிஎல் போட்டிகளுக்கும் நடுவராக பணியாற்றி வருகிறார். ஐபிஎல் 11வது சீசனில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த இறுதி போட்டியில் நடுவர்களாக பணியாற்றிய இருவரில் இவரும் ஒருவர்.
நேற்றைய போட்டி ஐபிஎல்லில் இவர் நடுவராக பணியாற்றிய 97வது போட்டி. இதன்மூலம் அதிகமான ஐபிஎல் போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றியவர் என்ற பெருமையை ரவி பெற்றுள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.