திரும்பி வந்துட்டாரு தோனி.. நியூசிலாந்தை தெறிக்கவிட தயாரான இந்திய அணி!!

By karthikeyan VFirst Published Feb 2, 2019, 10:04 AM IST
Highlights

தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக மூன்றாவது மற்றும் நான்காவது போட்டிகளில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக ஆடிய தினேஷ் கார்த்திக், மூன்றாவது போட்டியில் நன்றாக ஆடி போட்டியை வெற்றிகரமாக முடித்துவைத்தார். ஆனால் நான்காவது போட்டியில் சொதப்பிவிட்டார். 

நியூசிலாந்துக்கு எதிரான நான்கு ஒருநாள் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், கடைசி போட்டி நாளை நடக்க உள்ளது. 

5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் மூன்று போட்டிகளிலும் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலுமே ஆதிக்கம் செலுத்தி ஆடிய இந்திய அணி, நான்காவது போட்டியில் அதற்கு நேர்மாறாக ஆடியது. விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டதால், அவருக்கு பதிலாக இளம் வீரர் ஷுப்மன் கில் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். அவரும் அறிமுக போட்டியில் சோபிக்க தவறிவிட்டார். 

மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ள தோனி, முதல் இரண்டு போட்டிகளில் ஆடினார். தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக மூன்றாவது மற்றும் நான்காவது போட்டிகளில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக ஆடிய தினேஷ் கார்த்திக், மூன்றாவது போட்டியில் நன்றாக ஆடி போட்டியை வெற்றிகரமாக முடித்துவைத்தார். ஆனால் நான்காவது போட்டியில் சொதப்பிவிட்டார். டாப் ஆர்டர்களையே பெரும்பாலும் சார்ந்துள்ளது இந்திய அணி. அவர்கள் சோபிக்காத போட்டிகளில் மிடில் ஆர்டர்கள் பொறுப்புடன் ஆடி அணியை மீட்டெடுக்க தவறிவிடுகின்றனர். 

கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டிருப்பதால் அவரும் ஆடவில்லை. இந்நிலையில், தோனியும் ஆடாதது இந்திய அணியின் மிடில் ஆர்டரில் சிக்கலை ஏற்படுத்திவிட்டது. எனவே கடைசி போட்டியில் தோனி ஆடியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நாளை போட்டி நடக்க உள்ள நிலையில், தோனி காயத்திலிருந்து குணமடைந்துவிட்டதாகவும், கடைசி போட்டியில் கண்டிப்பாக ஆடுவார் என்று இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளார். 

எனவே கடைசி போட்டியில் தோனி ஆடுவது 100% உறுதியாகிவிட்டது. தோனி மீண்டும் வருவதால் தினேஷ் கார்த்திக் கடைசி போட்டியில் பென்ச்சில் உட்கார வைக்கப்படுவார். 
 

click me!