இந்திய பிஸ்டல் சுடுதல் விளையாட்டின் தலைமை பயிற்சியாளர் காலமானார்…

 
Published : Dec 14, 2016, 11:32 AM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
இந்திய பிஸ்டல் சுடுதல் விளையாட்டின் தலைமை பயிற்சியாளர் காலமானார்…

சுருக்கம்

இந்திய பிஸ்டல் சுடுதல் விளையாட்டின் தலைமை பயிற்சியாளர் செய்யது வாஜித் அலி (59) மாரடைப்பால் திங்கள்கிழமை காலமானார்.

புணேவின் சத்ரபதி சிவாஜி விளையாட்டரங்க வளாகத்தில் நடைபெற்ற 60-ஆவது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் நடுவராக செயல்பட்டுக் கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து, ரைபிள் சுடுதலுக்கான இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரும், போட்டி ஒருங்கிணைப்பாளருமான பவன் சிங் கூறியதாவது:

“நடுவராகச் செயல்பட்டுக் கொண்டிருந்த செய்யது வாஜித் அலிக்கு, இரவு 8 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றோம்.

எனினும், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் 9 மணியளவில் அறிவித்தனர் என்று பவன் சிங் கூறினார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

விஜய் ஹசாரே டிராபியில் கோலி மிரட்டல் சதம்.. 16000 ரன்களை கடந்து புதிய சாதனை
'பும்ரா, ரிஷப் பண்ட் என்னிடம் மன்னிப்பு கேட்டனர்'.. உருவக் கேலி குறித்து மனம் திறந்த பவுமா..!