இந்திய ஓபன் பாட்மிண்டன்: காலிறுதி சுற்றில் கால் பதித்த இந்திய வீரர்கள்...

 
Published : Feb 02, 2018, 11:59 AM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
இந்திய ஓபன் பாட்மிண்டன்: காலிறுதி சுற்றில் கால் பதித்த இந்திய வீரர்கள்...

சுருக்கம்

Indian Open Badminton Indian players in quarter-finals

இந்திய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் காஷ்யப், சமீர் வர்மா, சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி - அஸ்வினி பொன்னப்பா இணை, பிரணவ் ஜெர்ரி சோப்ரா - சிக்கி ரெட்டி இணை, மானு அத்ரி - சுமீத் ரெட்டி இணை ஆகியோர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.

இந்திய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் காஷ்யப் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 21-19, 19-21, 21-12 என்ற செட்களில் சகநாட்டவரான ஷ்ரேயன்ஷ் ஜெய்ஸ்வாலை தோற்கடித்தார்.

அதே சுற்றில் சமீர் வர்மா 21-18, 19-21, 21-17 என்ற செட்களில் இந்தோனேஷியாவின் டாமி சுகியார்டோவை வென்றார்.

மற்றொரு பிரிவான கலப்பு இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி - அஸ்வினி பொன்னப்பா இணை 21-16, 15-21, 23-21 என்ற செட்களில் மலேசியாவின் டான் கியான் மெங் - லாய் பெய் ஜிங் இணை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

அதே பிரிவில் பிரணவ் ஜெர்ரி சோப்ரா - சிக்கி ரெட்டி இணை 21-10, 21-19 என்ற செட்களில் மலேசியாவின் யோகேந்திரன் கிருஷ்ணன் - இந்தியாவின் பிரஜக்தா சாவந்த் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிபெற்றது.

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மானு அத்ரி - சுமீத் ரெட்டி இணை 21-11, 21-15 என்ற செட்களில் மற்றொரு இந்திய ஜோடியான துஷர் சர்மா - சந்திரபூஷன் திரிபாதியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஆஷஸ் 3வது டெஸ்ட்.. சரிந்த விக்கெட்டுகள்! சரித்திரம் படைத்த அலெக்ஸ் கேரி! ஆஸி.யை மீட்ட ஒற்றை நாயகன்!
யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு உடல்நலக்குறைவு, SMAT போட்டிக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதி