அசாத்திய ஆட்டத்தால் அசத்திய இந்திய குத்துச்சண்டை வீரர்கள்; இந்தியாவுக்கு பதக்கம் உறுதி…

Asianet News Tamil  
Published : Apr 06, 2017, 11:23 AM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
அசாத்திய ஆட்டத்தால் அசத்திய இந்திய குத்துச்சண்டை வீரர்கள்; இந்தியாவுக்கு பதக்கம் உறுதி…

சுருக்கம்

Indian boxers to match impossibly acattiya India is committed to the medal

தாய்லாந்து சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவின் ஷியாம் குமார் மற்றும் ரோஹித் டோகாஸ் ஆகியோர் அசாத்திய ஆட்டத்தால் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் தாய்லாந்து சர்வதேச குத்துச்சண்டைப் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் 49 கிலோ எடைப் பிரிவில் ஷியாம் தனது காலிறுதியில் தாய்லாந்தின் சமாக் சேஹனை வெற்றிக் கண்டு அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஷியாம் தனது அரையிறுதியில் முன்னணி வீரரான கியூபாவின் ஜார்ஜ் அலிஜான்ட்ரோவை எதிர் கொள்கிறார்.

64 கிலோ எடைப் பிரிவில் ரோஹித் தனது காலிறுதியில் கஜகஸ்தானின் குயாடோவ் குயானை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

இந்தியாவின் ரோஹித்தும், உஸ்பெகிஸ்தானின் இல்னூரும் மோதுகின்றனர்.

ஷியாமும், ரோஹித்தும் அரையிறுதிக்கு முன்னேறியதால் தங்களது பதக்கத்தை உறுதி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

2 நாளில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டி.. ஒரே நாளில் 20 விக்கெட்.. மெல்போர்ன் பிட்ச் கியூரேட்டர் விளக்கம்!
இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் வி.வி.எஸ் லட்சுமணன்?.. பிசிசிஐ சொன்ன முக்கிய அப்டேட்!